in

அரசு பேருந்தை மறித்து ..சாலையில் படுத்து மறியல்..

அரசு பேருந்தை மறித்து ..சாலையில் படுத்து மறியல்..

 

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி நடத்தும் பந்த் போராட்டத்தின் காரணமாக கோரிமேடு எல்லையில் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்று செல்கின்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக பயணிகள் காத்திருந்து பயணிக்கின்றனர்.

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று முழு போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் தனியார் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை.

தமிழகத்திலிருந்து வரும் அரசு பேருந்துகள் அனைத்தும் புதுச்சேரி எல்லையான கோரிமேடு, கனக செட்டிகுளம், முள்ளோடை, மதகடிப்பட்டு ஆகியவற்றில் நிறுத்தப்படுகின்றன.

வெளியூர் செல்லும் பயணிகளுக்கு புதுச்சேரி அரசின் பேருந்து மூலம் பேருந்து நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் எல்லையில் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார்கள்.

அங்கு காத்திருக்கும் தமிழக பேருந்துகள் மூலம் பயணிகள் சென்னை, திண்டிவனம், மரக்காணம், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற தமிழக தொகுதிக்கு செல்கின்றனர்.

ஒரு எல்லைகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேருந்துகள் காத்திருக்கின்றன. பெரும் அளவிலான பயணிகள் வரவில்லை என்றாலும் அவர்களுக்காக காத்திருந்து தமிழக பேருந்துகளில் ஓட்டுனர்கள் அழைத்து செல்கின்றனர்..

What do you think?

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது

தஞ்சை பெரிய கோவிலில் துவங்கிய கிரிவலம்.. பக்தர்கள் மகிழ்ச்சி..