in

மொழையூரை அடுத்த கூடநடமங்கை கிராமத்தில் தீ பற்றி எரிந்து வீடு முற்றிலுமாக சேதம்

மொழையூரை அடுத்த கூடநடமங்கை கிராமத்தில் தீ பற்றி எரிந்து வீடு முற்றிலுமாக சேதம். மர்ம நபர்களின் செயலா அல்லது மின்கசிவால் ஏற்பட்டதா என மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மொழையூர் ஊராட்சி உட்பட்ட கூடநடமங்கை கிராமத்தில் வசிப்பவர் மகேஷ் இவருக்கு திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன இந்த நிலையில் இவரும் இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தில் உள்ள பெண்ணின் உறவினர்கள் கடந்த மாதம் சண்டையிட்டு வீடு புகுந்து மகேஷின் சகோதரரை தாக்கியதில் அவரின் மண்டையில் பலத்த காயம் அடைத்துள்ளனர் பின்னர் அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .இதற்கு பிறகு கிராமவாசிகள் ஒன்றிணைந்து பேசி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளனார் இதனைத் தொடர்ந்து மகேஷ் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளார்

நேற்று இரவு மகேஷுக்கு தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது அவர் வீடு எரிவதாக கூறியுள்ளனர் உடனடியாக அவர் அவரது மைத்துனர் மற்றும் சகோதரிக்கு தகவல் அளித்து அவர்கள் இருவரும் சம்பவ இடத்தில் உள்ளது வீட்டை நேரில் சென்று பார்த்த பொழுது வீட்டில் உள்ள பீரோ ரொக்கபணம் பாஸ்போர்ட். உள்ளிட்டவை முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. இதனை அடுத்து அவர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்துயுள்ளனார் இதனை மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் கூடநடமங்கை கிராமத்திற்கு சென்று வீட்டை பார்த்து ஆய்வு செய்துள்ளனர் வீடு முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆனதை குறித்து மின் கசிவு காரணமாக தீ பற்றியதா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்துள்ளார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் (19.09.2024) | Britain Tamil Europe News | UK News | London News

மன அழுத்தம் காரணமாக வேளாண் துறை அலுவலர், வேளாண்துறை அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை