in

சித்த மருத்துவத்தை குறித்து சித்த மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

சித்த மருத்துவத்தை குறித்து சித்த மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

 

மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்று வரும் சித்த மருத்துவத்தை பயன்படுத்தும் போது வேறு ஏதும் விளைவுகள் ஏற்படாத வகையில் இருப்பதை கண்காணிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் நெல்லையில் சித்த மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்தின் மூலம் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதனை பாதுகாத்தல் மற்றும் கண்காணித்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17 முதல் 23ஆம் தேதி வரை மத்திய ஆயுஸ் அமைச்சகத்தின் மூலம் நோயாளிகள் கண்காணிப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் நிகழ்வையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மருத்துவமனைகள் மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் சித்த மருத்துவத்தின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது மக்களின் எண்ணமும் நம்பிக்கையும் மூலிகை மருத்துவத்தை நோக்கி திரும்பியுள்ள நிலையில் சித்த மற்றும் மூலிகை மருத்துவங்களை நோயாளிகள் பயன்படுத்தும் போது மாற்று விளைவுகள் ஏற்படாத வண்ணம் நோயாளிகளை கண்காணிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த சித்த மருத்துவமனைகளில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நெல்லை பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் நோயாளிகள் கண்காணிப்பு வாரத்தை ஒட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி திருமூலர் மாளிகை முன்பு தொடங்கிய இந்த பேரணியை கல்லூரி முதல்வர் மலர்விழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சித்த மருத்துவ முறையின் நோக்கங்கள் குறித்தும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதனை கண்காணிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்ற மாணவர்கள் பாளையங்கோட்டை வ உ சி மைதானம், எல்ஐசி கட்டிடம், லூர்து நாதன் சிலை வழியாக மீண்டும் கல்லூரியை அடைந்தனர். பேரணி சென்ற பாதைகளில் பொதுமக்களுக்கு சித்த மருத்துவ முறை தொடர்பான விழிப்புணர்வு பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

What do you think?

ஆழ்வாா்திருநகாி ஆதிநாதா் திருக்கோயிலில் பவித்ர உற்சவம் தங்க கருட வாகனத்தில் வீதி உலா

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு தேதியை அறிவித்த தளபதி விஜய்