in ,

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி.

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி.

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் என்னை, தாவரக் கொழுப்புகள், விலங்குகளின் கொழுப்புகள் ஆகியவை கலந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் நாடு முழுவதும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்த தகவலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமலராவ் சற்று நேரத்திற்கு முன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் இது பற்றி செய்தியாளர்களுடன் பேசிய ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தொடர்ந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியலை நடத்தி வருகிறார்.

விஜயவாடா, ஏலூரு ஆகிய நகரங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக ஏராளமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் அரசு முழு அளவில் தோல்வியடைந்துவிட்டது.

தன்னுடைய அரசின் தோல்வி தொடர்பான கவனத்தை மக்களிடமிருந்து திசை திருப்பவே சந்திரபாபு நாயுடு தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

What do you think?

நெய்யில் மாமிசம் மாமிசம் கொழுப்பு மீன் எண்ணெய் ஆகியவை கடந்திருப்பது உறுதி தவறுக்கு காரணமானவர்கள் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு பேட்டி.

தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் பகீர் பேட்டி.