in

ஆர்த்தி… சொல்வது பொய்..என் மகனிடம் சொல்லிவிட்டு தான் விவாகரத்து முடிவு எடுத்தேன்


Watch – YouTube Click

ஆர்த்தி… சொல்வது பொய்..என் மகனிடம் சொல்லிவிட்டு தான் விவாகரத்து முடிவு எடுத்தேன்

 

ஜெயம் ரவி விவாகரத்தை மட்டும் அறிவித்துவிட்டு அதன் பிறகு எந்த விளக்கமும் அளிக்காதது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் சென்னையில் இல்லாமல் கோவா.. வில் பாடகியுடன் இருப்பதாகவும் தகவல் வெளியானது, ஆர்த்தியோ விவகாரத்தை பற்றி எனக்கு தெரியாது என்னை ஆலோசிக்காமல் முடிவு எடுத்துவிட்டார் என்று போஸ்ட்போட அவரின் எல்லாம் குற்றச்சாட்டுக்கும் ஜெயம் ரவி முதன்முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இந்த விவாகரத்து முடிவு எனக்கு வருத்தத்தை தான் அளிகிறது, நான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பே கோர்ட்டுக்கு சென்றேன் அப்பொழுதே கிசுகிசுக்கள் வந்தன, எனக்கு விவாகரத்து முடிவு எடுத்தது தெரியாது என்று ஆர்த்தி சொல்லும் கதையில் லாஜிக்கே இல்லை நான் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளேன் அவர்கள் தரப்பில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்து பஞ்சாயத்து நடந்தது.

இவ்வளவு நடந்த பிறகும் எனக்கு தெரியாது என்பது கூறுவது அதிர்ச்சியாக இருக்கிறது. நான் என் மகன்களுக்காக இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன் தற்பொழுது சட்டரீதியாக செல்கிறேன், என்னை பாடகியுடன் இணைத்து பேசுவது தவறு அவருக்கு அம்மா அப்பா இல்லை அவர் ஒரு சைக்காலஜிஸ்ட் நிறைய பேருக்கு உதவிகள் செய்கிறார்.

அடுத்து என்னை மாப்பிங் செய்து புகைப்படங்களை வெளியிடுவார்களா …இன்னு தெரியவில்லை என் பிரச்சனையில் ஒரு நாள் உண்மை வெளியே வரும் நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பே எனது பெரிய மகனிடம் நான் கூறிவிட்டேன் தற்பொழுதும் நான் என் மகன்களுடன் தான் இருக்கிறேன்.

நான் கை காலை உடைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்தது எல்லாம் என் ரசிகர்கள்’ எனக்கு கொடுத்தது அவ்வளவு சீக்கிரம் அவர்களால் என் இமேஜை உடைக்க முடியாது என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

வேட்டையன் ஆடியோ லாஞ்ச…யில் இயக்குனர்களை மட்டம் தட்டிய ரஜினிகாந்த்

காளையார்கோவில் புனித மைக்கேல் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சரஸ்வதி விநாயகர் திருக்கோயில் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 108 சங்க அபிஷேகம்