in ,

தெக்கூர் அருள்மிகு ஸ்ரீ உலகுடையயம்மன் திருக்கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா

தெக்கூர் அருள்மிகு ஸ்ரீ உலகுடையயம்மன் திருக்கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்

சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ உலகுடைய அம்மன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது மிகப் பழமையான திருக்கோவிலை புணரமைத்து திருப்பணிகள் நிறைவு பெற்றது ஒட்டி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது

கோவில் முன்பு யாகசாலை அமைத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை பிரதிஷ்டை செய்து விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது தொடர்ந்து அம்மனின் மூல மந்திரங்கள் மற்றும் யாக வேள்விகள் கோமங்கள் நடைபெற்று கலசங்களுக்கு மகா கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசங்களுக்கும் மூலவர் உலகுடையயம்மனுக்கும் சிவாச்சாரியாரின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டன தொடர்ந்து கற்பூர ஆராதனை காண்பித்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது

இதனை அடுத்து அம்மனுக்கு புது பட்டு சேலை அணிவித்து வண்ணமலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றன நிறைவாக சிறப்பு பூஜை நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் சுற்றுவட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உலகுடைய அம்மனை வழிபட்டனர் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

What do you think?

காளையார்கோவில் புனித மைக்கேல் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சரஸ்வதி விநாயகர் திருக்கோயில் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 108 சங்க அபிஷேகம்

நாட்டரசன்கோட்டை ஶ்ரீகண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் பௌர்ணமி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை