in

முசிறியில் வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்

முசிறியில் வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் முசிறியில் வெளி மாநில மது விற்பனை செய்த வாலிபரை மதுவிலக்கு போலீசார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முசிறியில் வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முசிறியில் தா .பேட்டை ரோட்டில் ஒரு கட்டிடத்தை ஆய்வு செய்தபோது அந்த கட்டிடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 400 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த முசிறியைச் சேர்ந்த சின்னன்னன் மகன் சரவணன் ( 44 ) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து டாட்டா சுமோ வாகனம், மற்றும்இருசக்கர வாகனம் மற்றும் 13 ஆயிரத்து 530 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.முசிறி மாநில மது வகைகள் கைப்பற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் கோரிக்கை அளித்தனர்மனு

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 23-09-2024