in

பூம்புகாரில் மீனவர்கள் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தம்

பூம்புகாரில் மீனவர்கள் மூன்றாவது நாளாக வேலை நிறுத்தம்

 

பூம்புகாரில் மீனவர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தம், கைது செய்யப்பட்ட மீனவர்கள் படகுடன் விடுவிக்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவிப்பு.

பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி மகன் செல்லத்துரை (வயது 60) இவரது விசைப்படகில் 37 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரவு இலங்கை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் கிராமங்களில் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்கள் மூன்றாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக 500 பைபர் படகுகள் 100 விசைப்படகுகள் மூன்றாவது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. தினமும் பரபரப்பாக காணப்படும் பூம்புகார் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் அவர்களது படகுகளுடன் விடுவிக்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

What do you think?

திருவாரூர் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

மத்திய மாநில அரசுகளை கண்டித்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்