in

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா

 

திருநெல்வேலி புறநகர் மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது மாவட்ட கழக பொருளாளர் முன்னாள் எம்பி சௌந்தர்ராஜன் பேசியதாவது

பேரறிஞர் அண்ணா ஒரு அறிவு பெட்டகம் அண்ணாவின் வழியில் புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி அம்மா அண்ணன் எடப்பாடி யார் அவர்கள் வழி வழியாக ஆட்சி நடத்தி வந்தார்கள்.ஜூன் 16 ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் வந்து இருந்திருக்க வேண்டும் எம்எல்ஏ ஆகவும் சபாநாயகர் ஆகவும் இருக்கின்ற மதிப்பு கூறிய அப்பாவு தூங்கிக் கொண்டு இருக்கின்றார்.

சட்டமன்றத்திலும் வெளியிடங்களிலும் எடப்பாடி யார் அவர்களால் கேட்கப்படுகின்ற கேள்வி கேள்விகளுக்கெல்லாம் ஸ்டாலின் பதில் கூற வேண்டிய இடத்தில் இவர் பதில் கூறிக் கொண்டு இருக்கின்றார். இவர் அனைத்து மக்களுக்கும் சபாநாயகரா அல்லது திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரா செயல்படுகிறார்

கூடங்குளம் அனுமன் நிலையம்அமைப்பதற்கு இடம் கொடுத்தவர்களுக்கு இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை இதை பலமுறை கூறியும் எதுவும் நடவடிக்கை எடுக்காதவர் இந்த சபாநாயகர் அப்பாவு அவர்கள் .

இராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

திறக்கவில்லை என்றால் ஆறு மாதத்திற்குள் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அவர்கள் அனுமதியோடு மேன்மை தாங்கிய சபாநாயகர் அப்பாவின் வீடு முற்றுகையிடப்படும் இவ்வாறு பேசினார் கூட்டத்தில்எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா கழக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் சரவண பெருமாள், மாவட்ட மீனவர் அணி செயலாளர் அகிலன் வள்ளியூர் அழகானந்தம்,

வள்ளியூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பால் துரை,வள்ளியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் லாசர்,ராதாபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் அந்தோணி அமலராஜ், கே பி கே செல்வராஜ், திசையன்விளை நகர கழக செயலாளர் வி .பி . ஜெயக்குமார் நீலகண்டன் உட்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர்

What do you think?

திருநெல்வேலி பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் வாலிபர் ஒருவரின் பூணூலை அறுத்த விவகாரம்

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 24-09-2024