in ,

அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு அலங்கார ஆராதனை

அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு அலங்கார ஆராதனை

 

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் பிராமண சமாஜம் சார்பில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது முன்னதாக மூலவர் பெருமாள் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து உற்சவ தெய்வங்களை கோவில் மண்டபத்தில் எழுந்தருள செய்து வண்ண மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடந்தன பின்னர் துளசியால் அர்ச்சனைகள் செய்து நட்சத்திர தீபம் கும்ப தீபம் நாகதீபம் ஏக முக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன.

இதனை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபாடு செய்தனர் பக்தர்களுக்கு தீர்த்தம் ஜடாரி பிரசாதம் வழங்கப்பட்டன.

What do you think?

கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு

அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சிகோட்டை வரலாற்று அடங்கிய புத்தகத்தை அவர் வழங்கினார்