in

அரசு டாஸ்மாக் மதுபான கடையில் கடனாக மது கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர் கைது

அரசு டாஸ்மாக் மதுபான கடையில் கடனாக மது கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர் கைது

 

திருத்துறைப்பூண்டி அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையில் கடனாக மது கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர்களின் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரல் ஒருவர் கைது மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலி பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் கடனாக மது கேட்டு டாஸ்மாக் கடை ஊழியர்களை பணி செய்ய விடாமல் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் தொடர்ந்து ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் கொலைமிரட்டல் விடுத்தும் மதுபாட்டில்கள் கேட்டுள்ளனர்.

இது குறித்து கடை ஊழியர்கள் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆதனூர் மணல்மேடு தெருவை சேர்ந்த வீரசேகரன் என்பது விசாரணையில் தெரிய வந்தது உடனடியாக வீரசேகரனை போலீசார் கைது செய்தனர்.

ரகளையில் ஈடுபட்ட மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர் இந்த நிலையில் பணி செய்ய விடாமல் கடனாக மது கேட்டு டாஸ்மாக் ஊழியரை கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

What do you think?

அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சிகோட்டை வரலாற்று அடங்கிய புத்தகத்தை அவர் வழங்கினார்

வேதாரண்யம் அடுத்த தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு