in

திருப்பதிலட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் ஜீயர் சடகோம ராமானுஜர் பேச்சு

திருப்பதிலட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் ஜீயர் சடகோம ராமானுஜர் பேச்சு

 

உலக பிரசித்தி பெற்ற திருப்பதிலட்டில் கலப்படம் செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோம ராமானுஜர் பேச்சு

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி தேவஸ்தானம் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து திருவேங்கடமடையானை தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு பிரசாதமாக வழங்கப்பட கூடிய லட்டு மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த நிலையில் பிரசாதமாக வழங்கப்பட கூடிய லட்டில் கலப்படம் நடந்துள்ளதாக கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பி வரக் கூடிய நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபர் ராமானுஜர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதில் திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கேள்விப்பட்டு தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் தவறு செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும் இந்த விவகாரத்தை மத்திய அரசு உடனடியாக கையில் எடுக்க வேண்டும் எனவும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த நிகழ்வை அரசியல் ஆக்கக்கூடாது எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜர் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

What do you think?

கலைஞர் மு. கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் உயிரிழப்பு