in

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து குடத்துடன் மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கு வருகை தந்த கவுன்சிலர் பவுல்ராஜ்

ஆளுங்கட்சி கவுன்சிலரின் கோரிக்கையை கூட காது கொடுத்து கேட்காத திமுக அரசு எப்படி உள்ளாட்சியில் நல்லாட்சி கொடுக்கும்? தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து குடத்துடன் மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கு வருகை தந்த கவுன்சிலர் பவுல்ராஜ் பரபரப்பு பேட்டி

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் அந்த தண்ணீரை குடிக்கும் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக நெல்லை மாநகரப் பகுதியில் மாநகராட்சி சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுகிறது இதுபோன்ற சூழ்நிலையில் தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக்கூடாது என சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை வேதனை தெரிவித்திருந்தது

இதையடுத்து அவசர அவசரமாக மாநகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது இதுபோன்ற நிலையில் இன்று நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் கிட்டு(எ) ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது மாநகராட்சி ஆணையர் சுகபுத்திரா துணை மேயர் ராஜூ மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இந்நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் தோளில் குடத்துடன் கையில் பதாகை ஏந்தியபடி மாமன்ற அரங்கிற்குள் நுழைந்தார்

இதனால் அங்கு பரபரப்பு சூழல் நிலவியது அப்போது அவர் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது இதைத்தான் நாம் குடிக்கிறோம் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என சக மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசினார் பின்னர் தான் கொண்டு வந்த குடத்துடன் தனது இருக்கையில் அமர்ந்தார் முன்னதாக அவர் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார் தொடர்ந்து தான் கொண்டு வந்த கோரிக்கை அடங்கிய பதாகையை மாநகராட்சி ஆணையர் சுக புத்திராவிடம் வழங்கினார்.

முன்னாள் மேயராக இருந்த சரவணன் பதவி காலத்தில் பவுல்ராஜ் தொடர்ச்சியாக மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் மேலும் சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி மேயர் தேர்தலில் கட்சி அறிவித்த வேட்பாளரை எதிர்த்து பவுல்ராஜ் சுயேசையாக போட்டியிட்டு சுமார் 48% செய்த வாக்குகள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் இதுபோன்று சூழ்நிலையில் புதிய மேயர் பொறுப்பேற்ற பிறகும் தொடர்ச்சியாக பவுல்ராஜ் ஆளுங்கட்சி மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறார். மேலும் திமுக தலைமை தன்னை தற்காலிகமாக நீக்கியது ஆனால் நாம் நிரந்தரமாக கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று நேற்று பரபரப்பு கடிதம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்

இதுகுறித்து ஆறாவது மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூவம் ஆறாக தாமிரபரணி மாறுவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர் அந்த மன வேதனையில் தான் அரசின் கவனத்தை ஈர்க்க நானே தாமிரபரணி ஆற்றில் ஒரு குடம் தண்ணீரை கொண்டு வந்தேன் உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற முழக்கத்தோடு தேர்தலில் போட்டியிட்டேன் ஆனால் உள்ளாட்சியில் நல்லாட்சி நடக்கிறதா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது

ஒரு மாமன்ற உறுப்பினர் சொல்லியும் ஏனென்று கேட்காத ஒரு கட்சி தலைமை எப்படி நல்லாட்சி கொடுக்கும் கலைஞர் வழியில் பெரியார் கற்றுத் தந்த சுயமரியாதையோடு கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக விலகிக் கொண்டேன் என்றார். தொடர்ந்து திமுக ஆட்சி நல்லாட்சி இல்லையா என்ற கேள்விக்கு உள்ளாட்சியில் நல்லாட்சி இல்லை என்று சொல்கிறேன் நீங்கள் கேட்கும் கேள்விக்கு அதிலையே மறைமுக அர்த்தத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றார்

What do you think?

உள்நாட்டு உற்பத்தி அலகில் ( GDP) முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூர் நாட்டிற்கு இணையாக நமது முதல்வர் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்

நவதிருப்பதி பெருமாள்களுக்கு குடைகள் சமர்ப்பிக்கும் 3ம்ஆண்டு யாத்திரை ஏற்பாடு