in

புவனகிரி அருகே ஆதிவராகநல்லூர் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் விழா

புவனகிரி அருகே ஆதிவராகநல்லூர் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் விழா

சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.ஆதிவராகநல்லூரில் ஏரி மீட்பு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குழு சார்பில் ஆதிவராகநல்லூர் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

மீட்புக் குழு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் புவனகிரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரங்கத் தமிழ்ஒளி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் சேரலாதன் திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் அகத்தியம் பவுண்டேஷன் அர்ச்சனா ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு விழாவினை சிறப்பித்தனர் இதில் பொதுமக்கள் மற்றும் மீட்பு குழு அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு மண்டல அபிஷேக 22-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,