in

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்பு.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி கால் அரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் முத்தமிழ் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்று வருகிறது.இந்த வுழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி. ஆதித்யா செந்தில்குமார், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், உள்ளிட்டோர் பங்கேற்பு.

முன்னதாக கலைஞரின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், உள்ளிட்டர் மலர் தூவி மரியாதை செய்தனர் அதனைத் தொடர்ந்து விழா தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

What do you think?

புவனகிரி அருகே ஆதிவராகநல்லூர் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் விழா

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு மண்டல அபிஷேக 24-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்