in ,

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு மண்டல அபிஷேக 24-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு மண்டல அபிஷேக 24-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மூங்கிலம்மன் கோயில் தெருவில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவிலில் மண்டல அபிஷேக 24 ஆம் நாளை முன்னிட்டு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் திராட்சை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலச நீரால் உற்சவர் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு பஞ்சமுக தீபாரதனை, மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. . இன்றைய நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பஜனை கோயில் தெரு, திரு.ராஜா -கோகிலா குடும்பத்தினர் செய்திருந்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,

சிதம்பரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி இயந்திரத்துடன் அகற்ற வந்த அதிகாரிகள்