in

துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதற்கு செஞ்சியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 

விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதற்கு செஞ்சியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து செஞ்சியில் கூட்டு சாலையில்  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் தலைமையில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அண்ணாமலை, ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் சாரங்கபாணி, மாவட்ட பிரதிநிதி திருநாவுக்கரசு ,ஒன்றிய துணை செயலாளர் ராஜலிங்கம், முன்னாள் கவுன்சிலர் பெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கெங்கவரம் குமார், சோழங்குணம் சரவணன், மேல் ஒலக்கூர் கோவிந்தராஜ், தொட்டி சங்கர், பெருங்காப்பூர் இளைஞர் அணி பிரபு மற்றும் ஏராளமான பெண்கள் இளைஞர்கள்  கலந்து கொண்டனர்.

பட விளக்கம் .விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து செஞ்சியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அருகில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அண்ணாமலை, மாவட்ட பிரதிநிதி திருநாவுக்கரசு.

What do you think?

செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வது குறித்து, ‘யுனெஸ்கோ’ குழுவினர் ஆய்வு

நாகையில் குறுவை அறுவடை பணிகள் தீவிரம் 3346 மெட்ரிக் டன் நெல் இன்று வரை கொள்முதல்