in

தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்படுவதாக மக்கள் புகார் 

தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்படுவதாக மக்கள் புகார் 

 

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், அகரம் கிராமத்திலிருந்து மாம்பாக்கம் வழியாக புத்திரன் கோட்டை இணைப்பு சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்தது.

இதனை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரைப்பலங்களுடன் இந்த சாலையை சீரமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் ₹3.74 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த சாலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெறாமல் தாமதப்படுத்தி பணி செய்யப்பட்டதாக அப்பொழுது மக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும் கடந்த இரண்டு மதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

தரமற்ற முறையில் தார் சாலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு விடம் புகார் கூறினர்.

இதனை அடுத்து செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா வேலுவை நேரில் சந்தித்து தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக புகார் கூறிய சாலையை ஆய்வு செய்ய வேண்டும் என மனு அளித்திருந்தார் அந்த மனுவினை பரிசினை செய்த அமைச்சர் ஏ.வா.வேலு புகார் எழுந்துள்ள அந்த சாலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின் பெயரில் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் இயந்திரங்களைக் கொண்டு சாலையை தோண்டி எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் சில பகுதிகளில் பகுதிகளில் நிர்ணயம் செய்யப்பட்ட அளவைவிட குறைந்த அளவில் சாலை அமைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனால் அந்த பகுதியில் சலசலப்பு நிலவியது.

மேலும் இந்த சாலையில் பயன்படுத்தப்பட்ட தார் அளவு, ஜல்லிக் கல்லின் தரம் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக சென்னைக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

What do you think?

காஞ்சிபுரம் அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழா

ஏழுமலையான் கோவிலுக்கு அபிஷேகம் (கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்)