in

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அஇஅதிமுகவின் புதிய உறுப்பினருக்கான அதிமுக கழக அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அஇஅதிமுகவின் சார்பில் திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட27 வது வார்டு மற்றும் 32 வது வார்டு பகுதிகளில் அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினருக்கான அதிமுக கழக அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி உரையாற்றிய முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் எஸ் ராமச்சந்திரன் அவர்கள் இந்த உறுப்பினர் அட்டை என்பது கட்சியிலே நாம் உறுப்பினராக இருக்கிறோம் என்பதற்காக மட்டுமல்ல அது ரேஷன் கார்டு,ஆதார் கார்ட், பான் கார்டு போல அதிமுகவினருக்கு இது ஒரு முக்கியமான உறுப்பினர் அட்டை என்றும் அதுமட்டுமல்லாமல் இந்த உறுப்பினர் அட்டை என்பது நாங்கள் அதிமுகவில்உறுப்பினராக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் என்றும் முன்னாள் பார்வாளர் துறை அமைச்சர் எஸ். ராமச்சந்திரன் அவர்கள் உரையாற்றினார்.

இதனை அடுத்து உறுப்பினர் அட்டையை வாங்க வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு சுட சுட சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை கத்திரிக்காய் தொக்கு என வழங்கப்பட்டது.

What do you think?

செங்கம் நகர் பகுதியில் இயங்கி வந்த பழைய இரும்பு கடை குடோனில் திடீர் தீ விபத்து

பெரியதச்சூர் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு புரட்டாசி மாத அம்மாவாசை முன்னிட்டு நிகும்பலா யாகம்