in

திருவாரூரில் மத்திய நிதி அமைச்சர் தியாகராஜர் திருக்கோவிலில் வழிபாடு

திருவாரூரில் மத்திய நிதி அமைச்சர் தியாகராஜர் திருக்கோவிலில் வழிபாடு

 

திருவாரூரில் மத்திய நிதி அமைச்சர் தியாகராஜர் திருக்கோவிலில் வழிபாடு செய்தால் தொடர்ந்து பாஜகவில் மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருவாரூர் வருகை தந்தார் முன்னதாக உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தால் தொடர்ந்து சங்கீத மும்மூர்த்திகள் சபா சென்று வழிபாடு செய்தார்.

அப்போது வெளியே நின்று இருந்த பொது மக்களை சந்தித்து உரையாடினார் தொடர்ந்து அருகே இருந்த மளிகை கடை உரிமையாளரிடம் வியாபாரம் எவ்வாறு நடைபெறுகிறது என குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அங்கு வந்த பெண்களிடம் செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க சொன்னார் தொடர்ந்து அவருக்கு பாஜகவில் சேர்ந்ததற்கான உறுப்பினர் வெற்றிகரமாக சேர்க்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை உறுதி செய்து கொண்டார்.

இதனை அடுத்து அவ்வழியாக சென்ற நகராட்சி தூய்மை பணியாளர் மாரியம்மாள் என்பவரிடம் பேசும்போது நகரத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், முன்னாள் பாஜக நிர்வாகி ராகவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

What do you think?

சஞ்சீவ் திருமணதிற்கு ஆல்யா மானஸா வாழ்த்து

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 05-10-2024