in ,

பெரியதச்சூர் ஸ்ரீ அன்னபூரணி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய மண்டல அபிஷேக பூர்த்தி விழா

பெரியதச்சூர் ஸ்ரீ அன்னபூரணி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய மண்டல அபிஷேக பூர்த்தி விழா

 

பெரியதச்சூர் ஸ்ரீ அன்னபூரணி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய மண்டல அபிஷேக பூர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பெரியதச்சூர் ஸ்ரீ அன்னபூரணி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய மண்டல அபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு அதில் பல்வேறு வகையான திரவியங்கள், வாசனைப் பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், நவதானிய பொருட்கள், தேன், பன்னீர், பால், பழங்கள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பூர்ணாஹூதி செலுத்தி யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து புதிக்கப்பட்ட கலசங்கள் கோயில் உட்பிரகார மலம் வந்து மூலவர்கள் ஸ்ரீ அகத்தீஸ்வரர் மற்றும் ஸ்ரீ அன்னபூரணிக்கு கலசாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அகத்தீஸ்வரர் மற்றும் ஸ்ரீ அன்னபூர்ணி அம்மனுக்கு பஞ்சமுகத்திபாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய பரம்பரை அறங்காவலர் சிவஸ்ரீ குரு குருக்கள் செய்திருந்தார்.

What do you think?

சீரியல் நடிகையுடன் சிறகடிக்க ஆசை முத்து….வுக்கு நிச்சயம்

பிரிட்டன் தமிழ் ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 09-10-2024