in

அதிமுக பேரூராட்சி செயளாலர் மீது திமுக மாவட்ட பொருளாளர் கொலை வெறி தாக்குதல்

அதிமுக பேரூராட்சி செயளாலர் மீது திமுக மாவட்ட பொருளாளர் கொலை வெறி தாக்குதல்

அதிமுக பேரூராட்சி செயளாலர் மீது திமுக மாவட்ட பொருளாளர் கொலை வெறி தாக்குதல்

வைத்தீஸ்வரன் கோயில் அதிமுக பேரூராட்சி செயளாலர் மீது திமுக மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர் தலைமையில் திமுகவினர் கொலை வெறி தாக்குதல், தாக்குதலில் காயம் அடைந்த அதிமுக செயலாளர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் அதிமுக பேரூராட்சி செயலாளராக போகர் ரவி உள்ளார் இவர் ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டு வருகிறார். நேற்று அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பேரூராட்சி நிர்வாக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் குறித்து பேசியதாக கூறப்படும் நிலையில்.

இன்று போகர் ரவி வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்தித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒப்பந்த பணிக்கான தொகையை நிறுத்தி வைத்தது குறித்து செயல் அலுவலரிடம் கேட்க சென்ற நிலையில் அங்கு வந்த திமுக மாவட்ட பொருளாளரும் பேரூராட்சி மன்ற தலைவரின் கணவருமான அலெக்சாண்டர் மற்றும் அவரது சகோதரரும் துணைத் தலைவருமான அன்புச் செழியன் உள்ளிட்ட ஏழு பேர் போகர் ரவி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் திமுகவினர் தாக்கியதில் போகர் ரவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது இதனை அடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்த அதிமுக மாவட்டசெயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

திருத்துறைப்பூண்டி அருகே தனியார் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

திருப்பதி மலையில் ஏழுமலையானின் தங்க தேரோட்டம்