in

திருமாவளவன் சொல்லித்தான் விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார் எச் ராஜா பேட்டி

திருமாவளவன் சொல்லித்தான் விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார் எச் ராஜா பேட்டி

 

மயிலாடுதுறையில் பாஜக தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா பேட்டி, பொதுமக்களுக்கு தண்ணீர் கொடுத்து பாதுகாக்க வக்கற்ற அரசு திமுக அரசு, திருமாவளவன் சொல்லித்தான் விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார், இது ஒரு வகை மிரட்டல் அரசியல் என்று பேட்டி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத்ரெட்டி, மத்திய அரசு வழக்கறிஞர் கே ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா,

வாக்கு சதவிகிதத்தில் ஜம்மு காஷ்மீரில் பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் உள்ளது என்றும், 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வியத்தகு வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். திமுக அரசு கையாலாகாத வக்கற்ற அரசு என்று கடுமையாக விமர்சனம் செய்த அவர், விமானப்படை சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்து 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதற்கும் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததுதான் காரணம் என்று பேட்டியளித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக விடம் அதிக சீட்டு பெறுவதற்காக மிரட்டல் அரசியலில் ஈடுபடுவதாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தலைவர் தொல் திருமாவளவன் சொல்லித்தான் பேசுவார் தானாக பேசுவதில்லை என்று தெரிவித்தார்.

What do you think?

1 கோடியே 20 லட்சத்து 14ஆயிரத்து 140ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் மேல் …100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு ….நாகர்ஜுனா அறவிப்பு