in

காங்கிரஸ் கவுன்சிலர் மீது திமுக துணை சேர்மனின் கணவர் தாக்கு

காங்கிரஸ் கவுன்சிலர் மீது திமுக துணை சேர்மனின் கணவர் தாக்கு

தொண்டி பேரூராட்சி 7வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் காத்தார் ராஜா மீது திமுக துணை சேர்மனின் கணவர் ராஜேந்திரன் கும்பலாக சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் கவுன்சிலர் ராஜா பலத்த ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் 7வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காத்தார் ராஜா இருந்து வருகிறார். இவருடன் சில கவுன்சிலர்கள் ஏற்கனவே நடந்த மன்ற கூட்டத்தில் தங்களது எந்த தீர்மானங்களையும் பேரூராட்சி மன்றம் நிறைவேற்றப்படுவதில்லை  என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், எந்த நடவடிக்கையும் மன்றம் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடந்த மாத கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து 7வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் காத்தார் ராஜா, 9வது வார்டு திமுக கவுன்சிலர் மஹ்ஜபின் சல்மா,  14வது வார்டு மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் பானு , 15 வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் வெளிநடப்பு செய்திருந்தனர்.

இந்த தகவல் திருவாடனை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை கவுன்சிலர் ராஜா நடை பயிற்சிக்கு சென்றபோது பேரூராட்சி துணைச் சேர்மன் அழகு ராணியின் கணவர் ராஜேந்திரன் பத்துக்கு மேற்பட்டோருடன் கும்பலாக சென்று கவுன்சிலர் ராஜாவை வழிமறித்து கையில் வைத்திருந்த சாவி, மற்றும் சிறு ஆயுதங்களை வைத்து சராமரியாக தாக்கினர். இதில் கவுன்சிலர் ராஜாவின் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு  மயங்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து துணைச் சேர்மன் அழகுராணியின் கணவர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதும் தூய்மை பணியாளர்களின் வாகனங்களை சேதப்படுத்துவதும் அவர்களை தாக்குவதும் பொதுமக்களிடம் தகறாரில் ஈடுபடுவதும் என நாளுக்கு நாள் இவரின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே ராஜேந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடனடியாக கை செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

What do you think?

பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக நுழைந்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

தொப்புள் கொடியோடு தரையில் கிடந்த பெண் குழந்தை