in

கிராம பொதுமக்கள் மார்பளவு தண்ணீரில் நிமிர்ந்து சென்று தகனம்

கிராம பொதுமக்கள் மார்பளவு தண்ணீரில் நிமிர்ந்து சென்று தகனம்

 

மார்பளவு தண்ணீரில் இறங்கி சுடுகாட்டிற்கு இறந்து போன நபரின் உடலை சுமந்து சென்ற பொதுமக்கள்.

திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள சுருட்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி நாயுடு உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டார்.

அந்த ஊர் சுடுகாடு ஓடையை அடுத்து உள்ளது.

அந்த கிராமத்தில் யாராவது இறந்து விட்டால் உடலை ஓடையை கடந்து எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருப்பதி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் சுருட்டு பள்ளி கிராமம் சமீபத்தில் இருக்கும் ஓடையில் மார்பளவு உயரம் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

எனவே இறந்து போன கஸ்தூரி நாயுடு உடலை கிராம பொதுமக்கள் மார்பளவு தண்ணீரில் நிமிர்ந்து சென்று தகனம் செய்தனர்.

What do you think?

மர்மம் – கிரைம் – த்ரில்லர் ….. விஜய் ஆண்டனி …யின் ககனா மார்கன் விரைவில்

சோசியல் மீடியாவில் ஜாக்லின்..க்கு எதிராக வோடீங்….. தந்திரமாக காப்பாற்றும் விஜய் டிவி