in

கைலாசாவில் இருக்கும் ரஞ்சிதா..வை பற்றி தந்தை கூறியது என்ன? பரபரப்பு பேட்டி

கைலாசாவில் இருக்கும் ரஞ்சிதா..வை பற்றி தந்தை கூறியது என்ன? பரபரப்பு பேட்டி

 

நித்யானந்தாவின் பக்தையான நடிகை ரஞ்சிதா அண்மையில் கொடுத்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது.

நாடோடி தென்றால் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சிதா ஒரு சில படங்களில் நடித்தாலும் நடித்த எல்லா படங்களும் ஹிட் ஆனது.

இவர் 2010 ஆம் ஆண்டு நித்தியானந்த உடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நடிப்பதை நிறுத்தி, வெளிவுலகத்தில் தலை காட்டாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

மீடியாக்கள் தன் வாழ்க்கையை சிதைத்து விட்டது என் உறவுகள் என்னை விட்டு விலகியதற்கும் என் அன்பான கணவர் என்னை பிரிந்ததற்கும் இந்த மீடியா தான் காரணம் என்று மீடியாவை கடுமையாக தாக்கினார்.

நடிக்கும்போது கூட என்னைப் பற்றி கிசுகிசு வராமல் பார்த்துக் கொண்டவள் நான். மிடில் கிளாஸ் பொண்ணு நான், எங்கள் அப்பாவும் Business Man கிடையாது சாதாரண குடும்பத்தில் வந்த என்னுடைய வாழ்க்கையை பத்திரிக்கையாளர்கள் சிதைத்து விட்டனர் .

இந்த வீடியோவை பார்த்து இவருடைய கணவரும் விட்டு சென்றார், அவரது குடும்பமும் ரஞ்சிதாவை ஒதுக்கிவைத்தது. என் குடும்பத்தை காப்பாற்ற பணம் வேண்டும் வேறு வழியில்லாமல் நான் மீண்டும் நித்யானந்தா உடன் இணைந்திருக்கிறேன் என்று ரஞ்சிதா கூறி உள்ளார்.

ஆன்மீக வழியில் இனி பயணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன், நித்யானந்தாவுடன் சென்றவர் கைலாசாவின் பிரதமராக அறிவிக்கப்பட்ட ரஞ்சிதா தற்பொழுதும் கைலாசாவில்தான் இருக்கிறார்.

தனது பெயரையும் மா. அனந்மயி என்று மாற்றிக்கொண்டார். இவருடைய அப்பா அசோக் குமாரும் ஒரு நடிகர் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

அவரிடம் இந்த விஷயம் உண்மையா பொய்யா என்று கேட்ட பொழுது நான் என் மகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு போய் சண்டை போட்டேன் ஆனால் என்னை யாரும் அங்கு மதிக்கவில்லை என் மகளும் என் கூட வர மறுத்து விட்டால்.

இவர் போனது மட்டுமில்லாமல் என்னுடைய இன்னொரு மகளையும் கூட்டிசென்று விட்டார். என் இரண்டு மகள்களும் இறந்து விட்டன எனக்கு இருப்பது ஒரே ஒரு மகள் தான் என் மூன்றாவது மகள் என்னை தற்போது கவனித்துக் கொண்டிருக்கிறார்.

ரஞ்சிதாவால் அவமானப்பட்டு நோய்வாய் பட்டு என்னுடைய மனைவி படுத்த படுக்கையாகி போய் சேர்ந்து விட்டார். நித்யானந்தாவை ரஞ்சிதா திருமணம் செய்து கொண்டார் என்று செய்திகள் வெளியானது அது பற்றி எனக்கு தெரியாது என்று அவர் தந்தை கூறினார்.

What do you think?

தேசிய விளம்பர தூதராக ராஷ்மிகா நியமிக்கப்பட்டார்

கங்குவா படத்தில் அனைத்து மொழிகளிலும் சூர்யாவின் குரல் டப்பிங்