in

நெல்லை டவுன் கண்டியப்பேரி சாலையில் மேயர் திடீர் ஆய்வால் பரபரப்பு…

நெல்லை டவுன் கண்டியப்பேரி சாலையில் மேயர் திடீர் ஆய்வால் பரபரப்பு…

நெல்லை மாநகராட்சி டவுன் கண்டியப்பேரி சாலை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மேயரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதேபோல் கவுன்சிலர் அஜயும் மேயரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று திடீரென அங்கு வந்த மேயர் சாலையை தோண்டி அதன் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது கவுன்சிலர் அஜய் மற்றும் என்ஜினியர் தன்ராஜ் ஆகியோர் உடன் வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியினரிடமும் சாலை குறித்து கேட்டறிந்தார்.

சாலை அமைக்கும் பணியை மேயர் திடீரென ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

செஞ்சி ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்தில் நவராத்திரி திருவிளக்கு பூஜை