in

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் இன்று தொடங்கியது

முத்துப்பேட்டையில் ரூ.395 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்போது கட்டிட கான்ட்ராக்டரிடம் எப்போது வேலை முடித்து கொடுப்பீர்கள் என்று கேட்டார் அனைத்து பில்கலும் வழங்கப்பட்டும் இன்னும் வேலை முடிக்கப்பட்டவில்லை என்றும் பதினைந்து நாட்களில் வேலை முடித்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ கடிந்து கொண்டார்

தொடர்ந்து ஜாம்பவானோடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மாணவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்

தொடர்ந்து ஜாம்புவானோடை ஊராட்சி இராணுவ காலனியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளையும், ஜாம்புவானோடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து முனங்காடு தொண்டியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டம் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் முத்துப்பேட்டை வட்டாட்சியர் குணசீலி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

What do you think?

திருத்துறைப்பூண்டி அருகே சுடுகாடுக்கு செல்ல சாலை இல்லாததால் சேற்றில் இறங்கி இறந்தவர்களை தூக்கி செல்லும் அவல நிலை

நாகை அருகே இருசக்கர தணிக்கையின் போது திருட்டுப் போன ஐந்து இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்