in

திருச்சி அதிமுக பொதுக்கூட்டத்தில் நகைச்சுவையாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரால் கூட்டத்தில் சிரிப்பலைகள்

திருச்சி அதிமுக பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி வழக்கு மொழியில் நகைச்சுவையாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரால் கூட்டத்தில் சிரிப்பலைகள்….

அதிமுகவின் 53 ஆம் ஆண்டு துவக்க விழாவாவை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூரில் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் சி.த.செல்லபாண்டியன், வளர்மதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, திமுக ஆட்சி மக்களை ஏமாற்றி வருகிறது, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை மாற்றி எங்கும் கருணாநிதி எதிலும் கருணாநிதியின் பெயர் என்ற நிலையில் இன்றைய திமுக உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.தா.செல்லப்பாண்டியன்,
தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். இது வழக்கமாக இருந்தது சிறை பிடிப்பார்கள் பின்பு சில நாட்கள் சிறையில் வைத்துவிட்டு விடுவிப்பார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை விடுவிக்கவில்லை. மாறாக அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்கிறார்கள். இதை அந்த தொகுதி எம்பி கனிமொழி கண்டுகொள்ளாமல் காஷ்மீரில் முதல்வர் பதவியேற்பு விழாவிற்காக செல்கிறார். அதற்கு திமுக ஆட்சியின் முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைக்கிறார்.

நான் ஏதாவது கூட்டத்தில் பேசிட்டு போயிருவேன், பின்பு அதன் காரணமாக எனக்கு வழக்கு போட்டு விடுவார்கள்.

தமிழக மீனவர்களுக்காக டெல்லியில் உள்ள தமிழக 40 எம்பிக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்கிறார்கள்.

மக்கள் மீது நலன் இல்லாத அரசாக இந்த அரசு உள்ளது.

இன்றைக்கு திமுக காரர்கள் மதுபான கடைகளைத் திறந்து சம்பாதித்து வருகிறார்கள். கடை பூட்டப்பட்ட பிறகும் பாட்டிலுக்கு 50 ரூபாய் 100 ரூபாய் 200 வரை விற்று அவர்கள் பணம் ஈட்டி வருகின்றனர்.
அதேபோல கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் பெரிய மோசடி நடந்து வருகிறது.

தமிழக அரசு காப்பீட்டு நிறுவனத்திற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றுவதால் நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று அங்கு காப்பீட்டு பெற முடியாமல் ஏமாறும் நிலை உள்ளது.திமுக முதல்வர் ஸ்டாலின் விடியல் ஆட்சி தரேன்னு சொன்னாரு, ஆனா தமிழக மக்களுக்கு விடியலையே காணோம், ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டும் தான் விடியலா இருக்கு.

அமெரிக்காவுக்கு முதலீடு ஈர்க்கச் சென்ற ஸ்டாலின் அங்கு போய் மக்களுடைய வருமானத்தில் சைக்கிள் ஓட்டி சுற்றி வருகிறார்.
மக்கள் வரிப்பணத்த எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் இந்த திமுக முதல்வர் ஸ்டாலின்.

சென்னையில் 4000 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் அமைக்கிறோம்னு சொன்னாங்க ஆனா அந்த 4000 கோடி ரூபா எங்க போச்சுனே தெரியல.
அதுமட்டுமல்ல ரூபாய் 30 லட்சம் கோடிய தமிழ்நாட்டுக்காக கடன் வாங்கி வச்சிருக்காரு ஸ்டாலின். அதன் மூலமா மக்களுக்கு எந்த நல்ல திட்டமும் செய்யாம, அவருடைய குடும்ப நலனுக்காக செலவு செய்துள்ளார்.
இப்படி மக்கள் மீது அக்கறை கொள்ளாத முதல்வர் நமக்குத் தேவையா? வேண்டவே வேண்டாம் மக்களே என தனக்குரிய தூத்துக்குடி வழக்கு மொழியில் கலகலப்பாக பேசினார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலைகள் ஏற்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

திருச்சிராப்பள்ளி தென்னூர் ஆழ்வார் தோப்பில் இரண்டு பேக்கரிகளில் சோதனை

அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட வினை தீர்க்கும் விநாயகர் ஆலயம்