in

அரசின் தொகுப்பு வீடு மேற்கூறை இடிந்து விழுந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த இருவர் காயம்

அரசின் தொகுப்பு வீடு மேற்கூறை இடிந்து விழுந்து.வீட்டில் தூங்கி கொண்டிருந்த இருவர் காயம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி.

மயிலாடு துறை மாவட்டம், மணல் மேட்டை அடுத்துள்ளது கேசிங்கன் கிராமம்.இங்குள்ள பசுபதிபாக்கம் தெருவில் வசிப்பவர் மதியழகள். இவரது மகனகள் சதீஷ்குமார்,சந்தோஷ் இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது விடியற்காலை 5 மணிக்கு வீட்டின் மேற்புறம் உள்ள சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்துள்ளது

இதில் தூங்கி கொண்டிருந்த இருவர் மீதும் விழுந்தால்,இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அருகில் உள்ள தொகுப்பு வீடுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

What do you think?

வத்தலகுண்டில் இரண்டு மாடி வீடு திடீரென இடிந்து விழுந்தது பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு

தேரிழந்தூர் அர் ரஹீமிய்யா அரபி பாடசாலை மற்றும் மயிலாடுதுறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ரஹுமீ ஆலிம்கள் பேரவையின் 8 ஆம் ஆண்டு மீலாது விழா