in ,

செல்வ விநாயகர் திருக்கோவில் ஐப்பசி மாத சங்கடகர சதுர்த்தி சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

செல்வ விநாயகர் திருக்கோவில் ஐப்பசி மாத சங்கடகர சதுர்த்தி சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

 

சிவகங்கை அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலில் விநாயகப் பெருமானுக்கு ஐப்பசி மாத சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பொதிகை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் ஐப்பசி மாதம் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

முன்னதாக மூலவர் விநாயகப் பெருமானுக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு ரோஜா மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றன.

பின்னர் அலங்கார தீபம் கும்ப தீபம் ஏக முக தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் நடத்தப்பட்டது நிறைவாக மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

What do you think?

சிவகங்கை ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

ஶ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை