in

திரெளபதியம்மன் கோவில் கும்பாபிஷேம்- ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது

திரெளபதியம்மன் கோவில் கும்பாபிஷேம்- ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது

 

வேதாரண்யம் அருகே அண்டர்காடு கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோவில் கும்பாபிஷேம்- ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு கிராமத்தில் உள்ள பழமையான திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

கோவில் திருப்பணி செய்யப்பட்டு அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

கடந்த 18 ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று காலை 4ம்கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று. புனித நீர் நிறைந்த கலசங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

அப்போது ட்ரோன் கொண்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

Costly…யான Resort…டில் Birthday கொண்டாடிய Pooja Hegde

கரியாபட்டிணம் சந்தன மாரியம்மன் கோவிலில் தேர் வெள்ளோட்டம்