in

பதக்கங்களை பெற்ற மாணவ மாணவிகளை மேளதாளங்கள் முழங்க சாரட்டு வண்டியில் அழைத்து வந்து பாராட்டு

பதக்கங்களை பெற்ற மாணவ மாணவிகளை மேளதாளங்கள் முழங்க சாரட்டு வண்டியில் அழைத்து வந்து பாராட்டு

 

முதலமைச்சர் கோப்பை காண பீச் வாலிபால் போட்டியில் பதக்கங்களை பெற்ற மாணவ மாணவிகளை மேளதாளங்கள் முழங்க சாரட்டு வண்டியில் அழைத்து வந்து பாராட்டு.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. போட்டியில் சீர்காழி பள்ளியைச் சேர்ந்த ஆண்கள் அணி வெள்ளி பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்றது.

இதே போல் பெண்கள் அணி வெள்ளி பதக்கம் பெற்றது. பதக்கம் என்ற மாணவ மாணவிகள் சீர்காழிக்கு இன்று ரயில் மூலம் வருகை தந்தனர்.

அவர்களை பள்ளி நிர்வாகிகள் மாவட்ட வாலிபால் சங்க பொறுப்பாளர்கள் உடல் கல்வி இயக்குனர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் சால்வை அணிவித்து மாலை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசிரியர்களையும் மேளதாளங்கள் முழங்க குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்து கௌரவித்தனர்.

What do you think?

சாலையோரம் வாமும் ஏழை மக்களுக்கு திபாவளிக்கு,புத்தாடை வழங்கிய சமூக ஆர்வலர்

ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு புத்தாடை போர்வைகள் உணவு வழங்கிய இளைஞர்கள்