in

திடீரென்று கொட்டி தீர்த்த கனமழை, சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது

மயிலாடுதுறையில் திடீரென்று கொட்டி தீர்த்த கனமழை, சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பிற்பகல் வரை பரவலாக சாரல் மழை போல் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

இந்நிலையில் பிற்பகலுக்கு மேல் சுமார் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை வெளுத்து வாங்கியது. மயிலாடுதுறை மயிலாடுதுறை நகரம், சித்தர் காடு குத்தாலம், மங்கைநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெருத்த அவதிக்கு உள்ளானார்கள்.

மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

What do you think?

தில்லையாடியில் அருள்மிகு ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தை  உறுப்பினர் பிரகாஷ்காரத் திறந்து வைத்தார்