in ,

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி

 

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் தீவனூர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் திராட்சை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து யாகசாலை வேள்வியும், பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து, 108 சங்காபிஷேகம், கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகருக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து ஊஞ்சலில் காட்சியளித்த உற்சவர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகருக்கு மகாதிபாரதனை நட்சத்திர தீபம் கும்ப தீபம் சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம் பஞ்சமுகத்திபாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் நா.மணிகண்டன் அவர்கள் செய்து இருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உட்பிரகாரம் வலம்

திண்டிவனம் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி