in

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகளை தொடங்குவதற்கான தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் வெகு விமர்சையாக நடைபெற்றது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகளை தொடங்குவதற்கான தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளான நிலையில் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டு அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது இதன் காரணமாக கும்பாபிஷேகம் ஆகமவிதிப்படி நடத்தபடவில்லை

இதையடுத்து கும்பாபிஷேகம் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி விமான பாலாலயம் நடைபெற்றது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மீனாட்சி அம்மன் கோவிலின தங்க விமானங்கள், மற்றும் கோபுரங்களுக்கு இன்று பாலாலயம் நடைபெற்றது.

காலை விக்னேஷ்வர பூஜை. புண்யாஹவாசனம், நான்காம் கால யாகபூஜை. த்ரவ்யாஹுதி, மஹாபூர்ணாஹுதி தொடர்ந்து மஹாதீபாராதனை, யாத்ராதானத்துடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர சுவாமி திருக்கோயில் கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு பாலாலயம் விமர்சையாக நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாலாலயம் நிறைவு பெற்ற பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பாலாலய நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றதால் மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பாலாலய நிகழ்ச்சி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்

What do you think?

சென்னை – ராமநாதபுரம் பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் தொல்லியல் அறிஞர் பொ.இராசேந்திரனின் நினைவு மலராக “இராசேந்திரம்” நூல் வெளியீட்டு விழா