in

முசிறியில் எம் ஐ டி கல்வியின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை

முசிறியில் எம் ஐ டி கல்வியின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை

 

திருச்சி மாவட்டம் முசிறியில் எம் ஐ டி கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதில் எம் ஐ டி பாலிடெக்னிக் கல்லூரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி எம் ஐ டி போதி வித்யாலயா மற்றும் வெள்ளாளப்பட்டியல் எம் ஐ டி வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இயங்கி வருகிறது.

என் நிறுவனங்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் இளங்கோவன் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் சுவாமி ஐயப்பன் அறக்கட்டளையின்கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனங்களில் நேற்று காலை 8 மணி முதல் வருமானவரித்துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்பொழுதும் சோதனை நடைபெற்று வருகிறது இது வழக்கமான ஒன்று என்று கூறினாலும்வருமானவரி சோதனை என்பதுமுக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.

திருச்சி வருமான வரி அலுவலகத்தைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்டவர்கள்வருகை தந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விடிய விடிய சோதனை மேற்கொண்டு வருவதால் முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

வழக்கை ரத்து செய்ய… அல்லு அர்ஜுன் மனு

தமிழர்களின் பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி நெல்லை சாகுபடி செய்து அசத்தி வரும் இயற்கை விவசாயி