in

கூடங்குளம் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகள் அங்கே சேகரித்து வைப்பதன் மூலம் எந்தவித பாதிப்பும் இல்லை

கூடங்குளம் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட அணுக்கழிவுகள் அங்கே சேகரித்து வைப்பதன் மூலம் எந்தவித பாதிப்பும் இல்லை என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணுக்கழிவு சேகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நெல்லையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் ஆய்வுக்கூட்டத்துக்கு பின் பேட்டி.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுநிறுவனங்கள் குழுவின் தலைவர் அணைக்கட்டு எம்.எல்.ஏ A.P.நந்தகுமார் தலைமையில் குழு உறுப்பினர்கள் அசோகன், ஈஸ்வரன், மு.பெ.கிரி ,துரை.சந்திரசேகரன், சிந்தனை செல்வன், பிரகாஷ் , வேலு, ஜவாஹிருல்லா ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

முதலாவதாக கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு சென்ற அவர்கள் அங்கு அணுமிண் நிலைய திட்ட இயக்குனர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடர்பாக செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி, பணிநியமனம், உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து வள்ளியூர் அருகே உள்ள வடலிவிளையில் ஆசிய கண்டத்திலேயே முதன் முதலாக அமைந்துள்ள 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யும் காற்றாலையை பார்வையிட்டனர்.

தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது நிறுவனங்களின் அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக இயக்குனர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது அணுமின் நிலையம் அமைப்பதற்கு இடம் வழங்கிய 3000 குடும்பத்தினருக்கு பணி வழங்குவதில் பல்வேறு நிர்வாக சிக்கல் இருப்பதாக புகார்கள் எழுந்தது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இடம் வழங்கிய குடும்பத்தினர் தொழில்நுட்ப ரீதியான பயிற்சி பெறாதவர்கள் என்ற தகவல் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.நெய்வேலி அனல் மின் நிலையத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவதை போல் இங்கும் செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணு கழிவுகள் சேகரிப்பு குறித்த தகவல்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது அணு உலை பகுதியில் அதனை சேகரித்து வைத்து வருவதாக தெரிவித்தனர் இதனால் எந்த பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாது என்ற தகவலும் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் உள்ளிட்டவைகள் எதுவும் நடத்தாமல் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க ஏற்பாடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அணுக்கழிவுகள் சேகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இரண்டு மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அணுமின் நிலையத்தின் அறிக்கையை ஆய்வு செய்த பின் இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். நெல்லை மாவட்டம் வடலிவிளை கிராமத்தில் பிரேசில் நாட்டின் ஒத்துழைப்புடன் குறைந்த காற்று இருந்தாலும் கூட மின்சாரம் தயாரிக்கும் புதிய நடைமுறை பின்பற்றும் மாதிரி காற்றாலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

திருத்துறைப்பூண்டியில் உலக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அன்னவாகனத்தில் திருவீதி உலா