in

காட்டுமன்னார்கோயில் அருகே செல்போன் கடையில் திருடும் வீடியோ

காட்டுமன்னார்கோயில் அருகே செல்போன் கடையில் திருடும் வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ரெட்டியார் சாலையில் தனியார் செல்போன் சர்வீஸ் சென்டர் உள்ளது.

இந்த நிலையில் கடை உரிமையாளர் வழக்கம்போல் கடையை திறந்து வைத்துவிட்டு குளிர் பானம் அருந்ததி பக்கத்துக் கடையில் சென்று இருக்கிறார் திரும்பி வந்து கடையை பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது தெரிய வந்தது இதை அடுத்து கல்லாப்பெட்டி திறந்து பார்த்த பொழுது அதில் வைத்திருந்த 9,400 பணம் திருடு போனது தெரியவந்தது அதை எடுத்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே வந்து திடீரென வெளியேறி சென்றார்

மேலும் அதே ஒருவர் மீண்டும் கடை உள்ளே வந்து அங்கு வைத்திருந்த பொருட்களை ஆராய்ந்து பார்த்துள்ளார் மேலும் அங்கு எந்த பொருளும் கிடைக்காத நிலையில் அடுத்த கட்டமாக கடையின் கதவை திறந்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்திருந்தார் மேலும் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

What do you think?

திருவுக்கரையில் உள்ள தேசிய கல்மர பூங்காவில் சிறப்பு தூய்மை பணி நடைபெற்றது.

கடலூரில் பாதாள சாக்கடை பணிகளுக்கு மத்திய மாநில அரசுகள் உதவியுடன் 173. கோடி ஒதுக்கிடு