in

ஆதரவற்ற குறைந்தகளுக்கு சின்னம்மா வழங்கிய அன்பு பரிசு,

ஆதரவற்ற குறைந்தகளுக்கு சின்னம்மா வழங்கிய அன்பு பரிசு, மயிலாடுதுறை அன்பகத்தில் தீபாவளியை முன்னிட்டு கழக நிர்வாகிகள் நேரில் வழங்கினர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அன்பகம் என்ற பெயரில் ஆதரவற்ற பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மன குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் மாநில முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இதுபோல் கைவிடப்பட்ட நிலையிலும் பெற்றோரால் பராமரிக்க முடியாத நிலைகளும் இங்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர் இவர்களை கடந்த ஆண்டு புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து அங்குள்ள லட்சுமி என்ற மாணவிக்கு படிப்பதற்கு உதவி மேற்கொண்டார் இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் அங்கு தங்கி உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கு அன்பு பரிசினை வழங்கினார் தீபாவளி இனிப்புகள் புரட்சித்தாய் சின்னம்மாவால் அனுப்பி வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு நேரில் வழங்கப்பட்டது. குழந்தைகள் ஆர்வமுடன் அதனை பெற்றுக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

What do you think?

கன மழை காரணமாக மேலாநல்லூர் கிராமத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் இளம் பயிர்கள் நீரில் மூழ்கின

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம்