நெல்லையப்பர் திருக்கோயிலில் தைப்பூச தீா்த்தவாாி திருவிழா
திருநெல்வேலி என ஊருக்கு பெயர் வரக் காரணமாக அமைந்த நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் தைப்பூச தீா்த்தவாாி திருவிழாவின் ஒரு நிகழ்வாக இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்.
தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களுள் நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதியம்மாள் திருக்கோவிலும் ஒன்றாகும் . இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது. அதன் படி தை மாதத்தில் வரும் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4 ம் திருவிழாவான இன்று நண்பகலில் சுவாமிசன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது.
முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (திருநெல்வேலி) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.
அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் திருக்கோயிலுக்கு திரும்பினாா். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.
இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் முதலில் வேத பட்டா் முதலில் யாசகம் பெற சென்று நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், அவா் ஆற்றுக்கு குளிக்க சென்றதும் மழை பெய்தது நெல்மணிகள் நனையாமல் இருப்பது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சியை ஓதுவாமூா்த்திகள் பதிகமாக பாடல் பாடினா்.
தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டியமன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது . இன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலா் குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா்.