கல்வி கடவுள் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம்
நாமக்கல் பெருமாள் ஆலயத்தில் மாசிமாத வியாழக்கிழமையை முன்னிட்டு கல்வி கடவுள் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம் – ஏராளாமானவர்கள் தரிசனம்
நாமக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற பெருமாள் ஆலயமான மோகனுாரில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தில் கோஷ்டத்தில் தனியே உள்ள கல்வி கடவுள் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு மாசி மாத வியாழக்கிழமைய முன்னிட்டு, நல்லெண்நெய் காப்பு, பஞ்சாமிருதம், தேன், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் பன்னீர், சொர்ணம் கலசதீர்த்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சன அபிஷேகமும் பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு பின்பு .
துளசி, வண்ண நறுமண பூக்கள் மற்றும்மஞ்சள் / கொண்டு அர்ச்சனையும் ..நிறைவாக கல்வி கடவுள் லட்சுமி ஹயக்ரீவர், மேதசரஸ்வதி பாலஆஞ்சிநேயருக்கு கற்புறமஹா தீபம் காண்பிக்கப்பட்டது..
இந்நிகழ்வில்மாணவ மாணவிகள் தங்கள் புத்தகம் பேனாக்களையும் வைத்து வணங்கி சென்றனர்.