in

திருக்கோஷ்டியூர் அருள்மிகு ஸ்ரீ சுவாமி நாராயண பெருமாள் திருக்கோவில் மாசி மக பெருவிழா

திருக்கோஷ்டியூர் அருள்மிகு ஸ்ரீ சுவாமி நாராயண பெருமாள் திருக்கோவில் மாசி மக பெருவிழா

 

திருக்கோஷ்டியூர் அருள்மிகு ஸ்ரீ சுவாமி நாராயண பெருமாள் திருக்கோவில் மாசி மக பெருவிழா மூன்றாம் திருநாள் பெருமாள் தங்க ஹனுமந்த வாகனத்தில் பவனி

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் மாசி மிக பெருவிழாவை முன்னிட்டு மூன்றாம் திருநாள் சௌமிய நாராயண பெருமாள் தங்க அனுமந்த வாகனத்தில் பவனி வந்து பக்தர்கள் அருள் பாலித்தார்.

இவ்விழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் மூன்றாம் திருநாளில் கோவில் மண்டபத்தில் உற்சவர் பெருமாள் சர்வ அலங்காரத்தில் தங்க ஹன்மந்த வாகனத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று மகா கற்பூர தீபாரதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் மங்கள வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்கள் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர் .

What do you think?

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனி அரசாங்கம்

தென்னிந்திய சினிமாவை சாடிய ஜோதிகா