அல்லு அர்ஜுன், அட்லி ..யுடன் இணையும் பிரபல தமிழ் நடிகர்
அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லியுடன் இணைந்து அதிரடி திரைப்படத்தை உருவாக்க தயாராகிவிட்டார். புஷ்பா 2 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, திரிவிக்ரமுடன் இணைந்து பணியாற்றவிருந்தார், ஆனால் படபிடிப்பு தாமதமானதால், அட்லியிக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார்.
இந்த ஸ்கிரிப்ட் முதலில் சல்மான் கானுக்காக எழுதப்பட்டதாக, ஆனால் பெரிய பட்ஜெட் மற்றும் சல்மான் படங்கள் சரியாக ஓடாததால், இந்த திட்டம் கைவிடப்பட்டது.
மேலும் இது ஒரு பீரியட் ஆக்ஷன் டிராமா என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடமும் இருக்க, தமிழ் நட்சத்திரத்துடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறனர்.
சமீபத்தில், சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கக்கூடும் என்ற வதந்திகள் பரவின. அவர் தற்போது பராசக்தி படத்தில் பிஸியாக இருக்கிறார்.
இது உண்மையாக இருந்தால், அல்லு அர்ஜுனின் Action மற்றும் சிவகார்த்திகேயனின் நகைச்சுவை இணைந்து தெலுங்கு தமிழ் Industry…யில் மிகப்பெரிய பிரளயமே ஏற்படக்கூடும்.
ஆரம்ப கட்டத்தில் அட்லி இயக்கிய குறும்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் தற்பொழுது நீண்ட இடைவெளி..இக்கு பிறகு மீண்டும் அட்லீயுடன் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கிறார்.
600 கோடி Budget...டில் உருவாகும் இப் பாடத்திற்கு அட்லி ஆசைப்பட்ட படியே 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது, அல்லு..வுக்கு சம்பளமாக 300 கோடியும் பேசபட்டிருகிறது.