in

புதுச்சேரியில் 2 நாள் நடைபெறும் மாநில அளவிலான பெத்தாங் போட்டி


Watch – YouTube Click

புதுச்சேரியில் 2 நாள் நடைபெறும் மாநில அளவிலான பெத்தாங் போட்டியை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தொடங்கி வைத்தார்

பெத்தாங் விளையாட்டு போட்டி என்பது புதுச்சேரியின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றாகும். இது பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் விளையாடப்பட்டு வருகிறது. மேலும்,பிரான்ஸ் நாட்டில் இருந்து புதுச்சேரி வருபவர்கள் மிகவும் விரும்பி பெத்தாங் விளையாடுவார்கள்.

இந்த நிலையில்,புதுச்சேரி இந்திரா ஸ்போர்ட்ஸ் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் போட்டி தொடக்க விழா தேங்காய்திட்டு மைதானத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,பெத்தாங் குண்டுகளை வீசி போட்டியை தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

2 நாட்கள் நடைப்பெறும் இப்போட்டியில் 262 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாளான இன்று நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் ஆர்வமாக விளையாடினர்.இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திரா ஸ்போர்ட்ஸ் தலைவர் சரவணன், கேப்டன் பிரபு, பொருளாளர் தியாகராஜன் ஆகிய ஏற்பாடு செய்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊராட்சி ஒன்றிய அமைப்பு பதவிகளை கலைக்க கூடாது

பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதில் உள்நோக்கம்