in

4 கோடி ரூபாய் செலவில் கட்டி 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத சமுதாய நலக்கூடம்

4 கோடி ரூபாய் செலவில் கட்டி 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத சமுதாய நலக்கூடம்

 

புதுச்சேரி…4 கோடி ரூபாய் செலவில் கட்டி 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத சமுதாய நலக்கூடம்…மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்வருக்கு திமுக மனு…

புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செயல்படாமல் வீணடிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

இதனை ஆதாரத்துடன் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. நகரின் மையத்தில் உருளையன்பேட்டை தொகுதி ராஜா நகரில் ஆதிதிராவிட மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, சமுதாய நலக்கூடம் மற்றும் நூலகம் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

கட்டி முடித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இந்த சமுதாய நலக்கூடம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் திமுக பொதுக்குழு உறுப்பினரும் உருளையன்பேட்டை திமுக பொறுப்பாளருமான கோபால் தலைமையில் திமுகவினர் புகார் மனுவாக அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பதாக உறுதி அளித்தார்.

What do you think?

விநாயகர் சிலைகள் அதிரடி படை போலீசார் பாதுகாப்புடன் ராட்சத கிரேன் மூலம் தாமரை குளத்தில் கரைப்பு

தற்கொலையில் தேசிய அளவில் புதுச்சேரிக்கு 3 வது இடம்.. விழிப்புணர்வு ஊர்வலத்தில் மருத்துவர்கள் தகவல்…