in

வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலரை திடீரென தாக்கிய மதுப்பிரியர்


Watch – YouTube Click

வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலரை திடீரென தாக்கிய மதுப்பிரியர்

 

வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலரை திடீரென தாக்கிய மதுப்பிரியர் -நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறை

மதுரை பழங்காநத்தம் பகுதியில் சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சிறப்பு சார்பாளர் குமரேசன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது

அந்த சாலை வழியே மதுபோதையில் வாகனத்தை ஒட்டிக் கொண்டு வந்த அழகப்பன் நகர் பகுதியில் சேர்ந்த தங்கபாண்டி மற்றும் நண்பரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது

திடீரென காவலரை தாக்கி அருகில் இருந்த கடையின் ஷட்டரில் தள்ளி கீழே கிடந்த கல்லை எடுத்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது

மது பிரியர் தாக்கியதில் சுய நினைவு இழந்த காவலர் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய L.P. மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது

தொடர்ந்து மேல்சிகிச்சிக்காக அழகப்பனார் பகுதியில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

காவலரை தாக்கிய நபரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நபருக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

மதுரையில் தொழிலாளர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம்

கோடை வெயிலால் இறந்த கோழிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அடக்கம்