in

இங்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

இங்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

 

விருதுநகர் பேராலி சாலையில் முரளி என்பவருக்கு சொந்தமான அட்டைப்பெட்டிக்கு இங்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து. கட்டிடம் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

விருதுநகர் அருகே பேராலி ரோட்டில் முரளி என்பவருக்கு சொந்தமான பிரகாஷ் இம்பாக்ட்ஸ் என்ற அட்டைப்பெட்டிக்கு இங்கு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இந்த தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல்
தெரிவித்தனர்.

இதனை அடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர். கட்டிடம் மற்றும் அட்டைப் பெட்டியில் அடிக்கப்படும் இங்க் உட்பட உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

What do you think?

மத்திய அரசின் பட்ஜெட் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம் ஸ்ரீமதி அபராஜிமதுரையில் தா சாரங்கி பேட்டி

அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலய பத்தாம் ஆண்டு ஆடி திருவிழா திருவீதி உலா