in

கொடிய விஷம் உள்ள நல்ல பாம்பு, அலறி அடித்து ஓடிய வீட்டின் உரிமையாளர்கள்


Watch – YouTube Click

கொடிய விஷம் உள்ள நல்ல பாம்பு, அலறி அடித்து ஓடிய வீட்டின் உரிமையாளர்கள்

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குமரக்கோவில் மேல வீதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இன்று கழிவறைக்கு சந்தோஷ் சென்றபோது உஷ் என்ற சத்தத்துடன் கழிவறையின் உள்ளே சுமார் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியுள்ளது.

இதன் காரணமாக அலறி அடித்து வெளியே வந்த சந்தோஷ் சீர்காழியைச் சார்ந்த பாம்பு பிடி வீரர் பாண்டியனக்கு தகவல் அளித்தார்.

அங்கு வந்த பாம்பு பிடி வீரர் சிறிது நேரம் தேடுதல் வேட்டைக்கு பின்னர் கொடிய விஷம் உள்ள நல்ல பாம்பை லாபகமாக பிடித்தார்.

அவர் பிடிக்கும் பொழுது கோபத்தில் பாம்பு பலமாக சீறியபடி இருந்தது. பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டார்.

தற்போது மயிலாடுதுறை பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கழிவறைக்குள் புகுந்த தவளையை தேடி பாம்பு உள்ளே வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ஈரப்பதமுள்ள மழை நாட்களில் கழிவறை மற்றும் வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் எச்சரிக்கையுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று பாம்பு பிடி வீரர் பாண்டியன் அறிவுரை கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

காவல்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி

“குழு அமைப்பை ஏற்படுத்தி எம்.ஜி.ஆர் தீர்வு கண்டார்”- கு.ப.கிருஷ்ணன் பேட்டி