in

குத்தாலம் காந்தி பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குத்தாலம் காந்தி பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது

தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அதிமுக தலைமை கழகம் அறிவுறுத்தலின் பெயரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது

இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குத்தாலம் காந்தி பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த தினம் பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பேசியபோது திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை, விலைவாசி உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்ற மக்களை வாட்டி வதைக்கும் அரசாக திமுக அரசு இருந்து வருகிறது..

திமுக ஆட்சியைப் பொருத்தமட்டில் பேரறிஞர் அண்ணா சொன்னதை போல் ஊழல் செய்வதையே திமுக தொழிலாக வைத்து வருகிறது.. எனவே திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வகையில் அம்மாவின் திட்டங்களை முடக்கியது திமுக அரசு. மேலும் பேசிய அவர் திமுக ஊழல் பட்டியல்களை பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்..

இந்நிகழ்ச்சியில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் கோமல் ஆர்.கே அன்பரசன் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் குத்தாலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மகேந்திரன்வர்மன் குத்தாலம் பேரூர் கழக செயலாளர் எம் சி பாலு மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பா. சந்தோஷ்குமார் மணல்மேடு பேரூர் கழக செயலாளர் தொல்காப்பியன் மயிலாடுதுறை நகர கழக செயலாளர் எஸ் செந்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

What do you think?

உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு.

மூதாட்டி இடம் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் 5 சவரன் செயினை பறித்து சென்றதால் பரபரப்பு